Tuesday, September 2, 2014

85 RRR ஊழியர்களுக்கு பணி நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு !

85  RRR  ஊழியர்களுக்கு பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவு  !

ஏற்கனவே விடுபட்ட 85 RRR  ஊழியருக்கு பணி  நியமனம் வழங்க சென்னை  உயர் நீதிமன்றம் கடந்த 20.06.2014 இல்  இலாக்காவுக்கு உத்திரவிட்டது உங்களுக்குத்  தெரியும். 

இந்த உத்திரவின் மீது  SLP  மேல் முறையீடு செய்ய நம்முடைய இலாக்காவில் தீர்மானித்து , அது குறித்து சட்ட அமைச்சகத்தின் ஒப்புதல் பெற கோப்புகள் அனுப்பப்பட்டன. இதில் ஆன கால தாமதம்,  RRR ஊழியர்களுக்கு சாதகமானது. 

எனவே CONTEMPT  PETITION  FILE  செய்து உறுத்து  ஆணை பெற்றதால் , வேறு வழியின்றி  WP  NO . 16041/2014 இல்  வழக்கு நடத்திய 85 RRR ஊழியர்களுக்கும்   உடனடி பணி  நியமனம் வழங்கிட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இது  தனியே வேறு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு செல்லுபடியாகாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.


உத்திரவு நகலை கீழே பார்க்கவும் :-

விடாது போராடி  வெற்றி பெற்ற  RRR  ஊழியர்களுக்கு நம்  கடலூர்   அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !